சிறுபான்மையினருக்கு நியாயம் கிடைக்காது

இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு ஒருபோதும் நியாயம் கிடைக்காது என ஒரு கிறிஸ்தவ தந்தை மனம் வெதும்பி கூறியுள்ளார். என் 13 வயது மகளை, தோக்கர் நியாஸ் என்பவர் கடத்தி பலாத்காரம் செய்ததுடன், முஸ்லிமாக கட்டாய மதமாற்றம் செய்துள்ளார். இதனை குறித்து காவல்துறையில் புகார் அளித்தோம். ஆனால் இது பொய் புகார் என கூறி, எங்கள் புகாரை ஏற்க மறுத்துவிட்டது காவல்துறை. அமைச்சர் ஜஹாஸ் ஆலமை தொடர்பு கொண்டோம். ஆனால், தன்னால் ஏதும் செய்யமுடியாது என அவர் கூறிவிட்டார். என் குழந்தை கிடைக்கவில்லை என்றால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என அந்த தந்தை தெரிவித்தார். இது நடந்தது எங்கோ அல்ல, நம் அண்டை நாடான பாகிஸ்தானில்தான்.