சிக்கலில் காங்கிரஸ்

கோவாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி நான்கு இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. இது குறித்து பேசிய அம்மாநில காங்கிரஸ் எம்.பியான பிரான்ஸிஸ்கோ சர்தின்ஹா ‘அனுபவம் இல்லாத தலைமையே இதற்கு காரணம்’ என கூறியுள்ளார். மேலும் ‘மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை, சிறுபான்மை தலைவர்களும் காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ளனர்’ என கூறியுள்ளார். இதே போல் சமீபத்தில், குஜராத்தில் எட்டு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இதற்கு பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தாவும் சட்டசபை எதிர்கட்சி தலைவர் பரேஷ் தனானியும் தங்கள் ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.