சாலையோர கிணறுகளை என்ன செய்ய போகிறார்கள்

சாலையோரங்களில் உள்ள திறந்தவெளி கிணறுகளை மூட, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.சேலம், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், சாலையோரங்களில், திறந்தவெளி கிணறுகள் அதிகளவில் உள்ளன. இதனால், அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. இதில், சில திறந்தவெளி கிணறுகளை மட்டும், தடுப்பு சுவர்கள் அமைத்து, நெடுஞ்சாலைத் துறையினர் மூடியுள்ளனர். அந்த தடுப்புகள் கூட, பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இதேநிலை, நீடித்தால் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.பயன்படுத்தப்படாமல் உள்ள ஆழ்துளை குழாய்களை மூடுவது போன்று, திறந்தவெளி கிணறுகளை மூட, நெடுஞ்சாலைத் துறை முன்வர வேண்டும்