சமுதாயத்தின் மனதறிந்த சன்யாஸி

தமிழக அரசு 2002ல் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. அதனை ஹிந்து சமுதாயம் முழுமனதுடன் வரவேற்பதை உலகறியச் செய்திட சென்னை கடற்கரையில் பொதுக்கூட்டம் நடத்தினார் பாரம்பரிய மிக்க ஒரு மடத்தின் தலைவர்.

ஆம், அண்மையில் சித்தியடைந்த காஞ்சி காமகோடி பீடம் ஜெகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்தான் அவர்.

(பின்னர் மிஷனரி மிரட்டலுக்கு அதே அரசு பணிந்து 2004ல் அந்தச் சட்டத்தை முடக்கியது வேறு விஷயம்).