சனாதனம் காக்க ஒன்றிணைவோம்

சிவகுரு சிவ தாமோதரன் ஐயா என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில், “சிதம்பரம் நடராஜரை சிறுமைப்படுத்தி பேசிய யூடியூபர் மைனர் விஜய் மீது புகார் அளிக்கப்பட்டும், அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சிவனடியார்கள் ஒன்றிணைந்து சிதம்பரத்தில் போராட்டம் நடத்தியும் கூட, தமிழகத்தை ஆளும் தி.மு.க தலைமையிலான அரசு அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படியே போனால், வருங்காலத்தில் ஹிந்துக்களாகிய நாம், நெற்றியில் பொட்டு வைக்க முடியாது, ஒரு சிறு அம்மன் கோயிலில்கூட கூழ் வார்த்து சுவாமி கும்பிட முடியாது. எனவே, ஹிந்து எனும் உணர்வோடு நாம் ஒன்றிணைய வேண்டும். இதுபோன்ற ஹிந்து மத விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தவும் நமது சனாதன தர்மத்தை காக்கவும், ஜூலை 2ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் அறவழி போராட்டத்தில் ஹிந்துக்கள் அனைவரும் வந்து கலந்துகொள்ள வேண்டும். நாம் இதுகுறித்து ஆளுநரிடம் மனு செய்வோம். அடியார்களுக்கு உணவும் அங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.