கோவில் நிலத்தின் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்.

பாளையங்கோட்டை திம்மராஜபுரம் அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோவில் 200 ஏக்கர் நிலம் இருந்தும் அடுத்த மாதம் கோவிலுக்கு விளக்கேற்ற எண்ணெய் இல்லை கோவில் நிலங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க கோரி வைகோ, திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்டோர் முதலமைச்சருக்கு மனு கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதை, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி ஆலய சொத்துக்களை பாதுகாக்க வழியில்லாமல் உறங்கிக்கொண்டிருக்கும் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து றநிலையத்துறை இணை ஆணையாளர் அலுவலகம் 21.10.2020 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் சங்க பரிவார் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆலய சொத்துக்களை காப்பதும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதும் நமது கடமை, அது இறைவனுக்கும் ஆலயங்களுக்கும் செய்யும் மாபெரும் தொண்டு.