கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு – அதிகாரிகள் மீது எச்.ராஜா பாய்ச்சல்

”கோவில் நில ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத, அகற்றாத அதிகாரிகள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.

மதுரையில் அவர் அளித்த பேட்டி: கோவில் நிலங்கள் அனைத்தும், பக்தர்களால் தானம் கொடுக்கப்பட்டவை. அவை, அரசுக்கு சொந்தமானவை இல்லை. அந்த நிலங்களில், அரசு கை வைப்பது, கோவில்களை முடக்கும் முயற்சி. எனவே, கோவில் நிலங்களை தாரை வார்க்கும் முடிவை, தமிழக அரசு முற்றிலும் கைவிட வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற, கோவில் நிலங்களை ஒப்படைப்பதாக, மாநில அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், அறநிலையத்துறை அதிகாரிகள் என்ன செய்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் கடமையில் இருந்து தவறிய அதிகாரிகள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.