கோயில் நிர்வாக அலுவலருக்கு குட்டு

பழனி கோயிலில் தூய்மைப்பணி டெண்டரை வெளியிட்ட நிர்வாக அலுவலர் குறித்து உயர் நீதிமன்றத்தில் கோயில் வழிபாட்டாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்தது. கோயிலின் நிர்வாக அலுவலர் நீண்ட காலம் தக்காராக செயல்படுவது சட்டவிரோதமானது.

ஒன்பது வருடங்களுக்கு மேலாக புதிய அறங்காவலர்களை நியமிக்காதது தவறு. உழவாரப்பணி செய்ய பக்தர்களுக்கு உரிமை உண்டு. உடனடியாக அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

பழனியில் இ.ஓ, தக்காராக செயல்பட்டது சட்டவிரோதமானது என்றால், அவரை வைத்து அறநிலையத்துறை அங்கு செய்த அனைத்துமே சட்டவிரோதமானது தானே!?