கோயிலை பாழ்படுத்தும் சமூக விரோதிகள்

கர்நாடகா, மங்களூருவில் உள்ள கொரகஜே கோவிலில் வருடாந்திர திருவிழா நடைபெற்று முடிந்தது. பின்னர் உண்டியலில் உள்ள காணிக்கையை எண்ணும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர். அப்போது உண்டியலில், பா.ஜ.க தலைவர்களை அவதூறாக சித்தரித்து கடிதங்கள், ஆணுறை பாக்கெட்டுகளும் கிடந்துள்ளன. இதேபோல மங்களூரு, கோபாலகிருஷ்ணன் கோவிலின் உள்ளே சில மர்ம நபர்கள் இயற்கை உபாதை கழித்து அசுத்தம் செய்து சென்றுள்ளனர். அவர்களை உடனடியாக கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.