கொரானா தொற்று உள்ளவர்களுக்கு மேலும் இரண்டு அறிகுறி இருக்கும்

இதுவரை தலைவலி, காய்ச்சல், சளி போன்ற புளூ காய்ச்சலின் அறிகுறிகள் தான் கொரோனா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளாகவும் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வுகள் கொரோனாவுக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள் இருக்கக் கூடும் என கூறுகின்றன. வாசனையை சரியான நுகர்ந்து இனம்காண முடியாத நிலை, மற்றும் சுவையை சரியாக உணர முடியாத நிலை – ஆகியவைதான் அந்த அறிகுறிகள். சீனா, இத்தாலி, தென்கொரியா நாடுகளில் உள்ள 25% கொரோனா நோயாளிகள் தங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்துள்ளதாகக் கூறி உள்ளனர்.