குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்தது

குடியுரிமை திருத்த சட்டம், நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு அறிவித்தது.

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில், மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் சிறுபான்மையினருக்கு, இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா, பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேறியது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின், இது சட்டமானது.

இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை, அரசிதழில், மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதன் மூலம், இச்சட்டம், நேற்று இரவு முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.