காலிஸ்தான் பயங்கரவாதி கைது

பஞ்சாப் அரசு தேடும் காலிஸ்தான் பயங்கரவாதியான சுக்பிக்ரிவால் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் டெல்லி சிறப்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் சிவசேனா தலைவர் ஹனி மஹாஜன் உட்பட பல ஹிந்து இயக்கத்தினரை கொலை செய்ய முயற்சித்தவர். பல கொலை வழக்குகளும் இவர் மீது உள்ளன. கடந்த டிசம்பர் 7ல் டெல்லி காவல்துறை இரண்டு காலிஸ்தான் பயங்கரவாதிகள், மூன்று முஸ்லிம் பயங்கரவாதிகளை கைது செய்தது. இவர்கள் டெல்லியில் தாக்குதல் நடத்தும் பெரிய சதித் திட்டத்துடன் அங்கு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.