காங்கிரஸ் 7 எம்பி,கள் இடைநீக்கம்

 “சபாநாயகர் மேஜையில் இருந்த காகிதங்களை காங்கிரஸ் எம்.பி.க்கள் குர்ஜீத் சிங் ஆஜிலா, பேஹனான் பென்னி, கவுரவ் கோகாய், டீன் குரியகோஸ், டி.என்.பிரதாபன், மாணிக்கம் தாகூர், ராஜ்மோகன் உன்னிதான் ஆகியோர் கிழித்து வீசி எறிந்தனர், இந்த செயலுக்கு சபை கண்டனம் தெரிவிக்கிறது” என கூறினார். (7 எம்.பி.க்களில் மாணிக்கம் தாகூர், தமிழ்நாட்டின் விருதுநகர் தொகுதி எம்.பி. ஆவார்).
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, இந்த உறுப்பினர்கள் சபாநாயகரை அவமதித்து விட்டனர் என கூறினார்.
அதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேரை இந்த அமர்வின் எஞ்சிய நாட்கள் முழுவதும் சபையில் இருந்து இடைநீக்கம் செய்வதற்கு, விதி எண்.374-ன் கீழ் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதனால் இந்த எம்.பி.க்கள், பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சபைக்கு வர முடியாது.