கண் தானத்தோடு தேகதானமும் செய்த பெரியவர்

சென்னை பெரம்பூரை சேர்ந்த சேர்ந்தவர் எல்லப்பமுதலியர் எண்பத்தெட்டுவயது பெரியவர் .  இவர் பகுதியின் முக்கிய  பிரமுகர். தனது மூன்று மகன்கள் இரண்டு மகள்கள். தனது முதுமைக்காலத்தில் வீட்டின் ஒரு பகுதியில் சிறிய பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். திடிரென ஒரு ஒரு வார காலமாக சிறுநீரக  கோளாறு காரணமாக சென்னை ராஜிவ்கந்தி அரசு பொதுமருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  டிசம்பர் 8 ம் தேதி இரவு காலமானார். அவர் தனது இறுதி காலம் நெருங்குவதை அறிந்து தனது இறப்பிற்கு பின்னர் கண்ணையும் தேகத்தையும் தானம் செய்துவிடவேண்டும் என்று தனது மகன்களையும் குடும்பத்தாரையும் பேசி சம்மதிக்க செய்துள்ளார். அனைவரின் சம்மதம் கிடைத்த அடுத்தநாளே காலமான அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது. இன்று( டிசம்பர் 10 ) அவரது கும்பத்தினரின் இறுதி சடங்குகளுக்கு பின்னர் உடலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமணிக்கு தானம் செய்யப்படுகிறது.