ஓய்வெடுக்க மாலத்தீவு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

லோக்சபா தேர்தல் ஒட்டி, முதல்வர் ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று, கூட்டணி வேட்பாளர்களுக்காக ஓட்டு கேட்டார். காலையில் நடைபயிற்சி செய்யும் போதும், வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர், ஓய்வெடுக்கும் வகையில் ஒரு வார பயணமாக, மாலத்தீவு செல்ல திட்டமிட்டுள்ளார். குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணமாக செல்லும் அவர், அரசு பணிகளையும் அங்கிருந்து கவனிப்பார் என்று கூறப்படுகிறது. ஏப். 29ம் தேதி புறப்படும் அவர் மே 7ம் தேதி வரை அங்கு தங்க திட்டமிட்டுள்ளார்.