ஐ.நா.வில் பெருமைமிகு பாரதம்

ஐநாவின் பேரிடர் மீட்பு படையில் பாரதத்தின் தேசிய பேரிடர் மீட்புப்படையும் விரைவில் இணைய உள்ளதாக அதன் இயக்குனர் என்.எஸ் பிரதான் தெரிவித்துள்ளார். 2006ல் அமைக்கப்பட்ட இதில் தற்போது 15,000 பேர் பணியாற்றுகிறார்கள். முன்னதாக பாரதம், ஐ.நாவின் பாதுகாப்பு துறை, லிபியா, தாலிபான் பயங்கரவாத தடுப்புக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.