ஏசுவின் பெயரால் நிதி முறைக்கேடு

தன்னை சாது என சொல்லிக் கொண்டு, ஹிந்துக்களின் புனித காவி ஆடையை உடுத்தி வேஷம் போடுபவர் சுந்தர் செல்வராஜ். இவர் ஜீஸஸ் மினிஸ்ட்ரிஸ் எனும் அமைப்பையும் ஏஞ்சல் டி.வியையும் நடத்தி வருகிறார். மதமாற்றத்திற்காக, இவரின் அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக 22.62 கோடி ரூபாய் வந்துள்ளது. தைவான், மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை, நைஜீரியா உட்பட பல நாடுகளில் இருந்தும் அரசின் எப்.சி.ஆர்.ஏ விதிகளை மீறி பணம் பெறப்பட்டுள்ளது. இதில் சீனாவை சேர்ந்த ஒரு உளவு நிறுவனத்தின் பணமும் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என ‘சட்ட உரிமைகள் ஆய்வகம்’ எனும் அமைப்பு புலனாய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தகவல்கள் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.