ஊடுருவல்காரர்கள் பற்றிய தகவல் அளித்தால் ஐந்து ஆயிரம் சன்மானம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.  குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே டெல்லியில் நடந்த மோதலில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையால் டெல்லியில் 38 பேர் பலியாகியுள்ளனர்.
இதை தொடர்ந்து, ராஜ் தாக்கரே கட்சியான நவநிர்மான் சேனா கட்சி அவுரங்கபாத் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில்,  வங்காளதேசம், பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள ஊடுருவல்காரர்கள் பற்றி தகவல் அளித்தால் ரூ.5 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் அப்பகுதிகளில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.