உலக இளைஞர் தினம்: பிரதமர் மோடி இன்று மக்களிடம் உரையாற்றுகிறார்

திறன் இந்தியா திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு துவக்கப்பட்டது. 2022க்குள், நாடு முழுவதும், 40 கோடி இளைஞர்களின் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு துவக்கப்பட்ட இத்திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ஆண்டு தோறும் ஜூலை 15-ம் தேதி உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிறது. திறன் இந்தியா திட்டம் துவக்கப்பட்டதன் 5-ம் ஆண்டு தினத்தையொட்டியும் பிரதமர் மோடி டி.வி. வாயிலாக நாட்டு மக்களிடம் இன்று உரையாடுகிறார்.