இ-ரக்ஷாபந்தன்

சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷாபந்தன் திருவிழா இன்று உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர், பாரத பிரதமர், உள்துறை அமைச்சர் என பல தலைவர்களும் இதற்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு கொரோனா தாக்கத்தினை முன்னிட்டு தனிமனித இடைவெளி,  போக்குவரத்து கட்டுப்பாடுகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள சூழ்நிலையில் இந்த விழா தற்போது ஒரு புதிய வடிவம் பெற்றுள்ளது. சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு வாட்ஸப், முகநூல் போன்ற சமூக வளைத்தளங்கள் வாயிலாக இ-ராக்கியை அனுப்பி டிஜிட்டல் முறையில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.