இல்லம்தோறும் வேல்

வருகின்ற ஆகஸ்ட் 9ஆம் தேதி வீடுதோறும் வேல்பூஜை செய்ய நம் ஹிந்து மடாதிபதிகள், சான்றோற்கள், ஆன்மீக பெரியவர்கள் என அனைவரும் அழைப்பு விடுத்ததை முன்னிட்டு பல ஹிந்து குடும்ப வீடுகளின் காம்பவுண்ட் சுவற்றில் வேல் படத்தை இப்போதே பலர் வரைய தொடங்கிவிட்டனர். இதில் பெரும்பாலும் குழந்தைகள் மிக உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர். பல குழந்தைகளும் வேல் படத்தை சார்ட் பேப்பரில் அழகாக வரைந்து அதனை தங்கள் வீட்டு சுவற்றில் ஒட்டி அழகு பார்க்கின்றனர்.

அவர்களுக்கு பெற்றோர்களும் பெயிண்ட், பிரஷ், ஸ்கெட்ச் எல்லாம் வாங்கித்தந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். சில இடங்களில் இதற்கான போட்டிகளும் சமூகவலைத்தளங்கள் வாயிலாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.