இவர் ஒரு முன்னுதாரணம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்ட கிராம பஞ்சாயத்து உறுப்பினரான விஜயன், தனது மகளின் திருமணத்தை முன்னிட்டு தனக்குரிய நிலத்தை நன்கொடையாக 3 பெண்களுக்கு வழங்க முடிவு செய்தார். அவர் நன்கொடையாக வழங்கும் நிலத்தின் ஆவணங்களை ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரகர் சேதுமாதவன் அவர்கள் அந்த பெண்களிடம் வழங்கினார். அனைவருக்கும் உத்வேகம் தரும் இந்த முன்னுதாரணமான செயலை அனைவரும் பாராட்டினர்.