இராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.

இராக் தலைநகர் பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க அல் ஆசாத் மற்றும் இர்பில் விமானப்படை தளங்கள் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணைகளை வீசி புதன்கிழமை தாக்குதல் நடத்தியது.

பத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும் தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

One thought on “இராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

  1. சித்தெரும்பும் திரும்பிக் கடிக்கும் குணம் கொண்டது தான்!!!!

Comments are closed.