இரங்கல்…

நாகபுரியைச் சேர்ந்த சங்கத்தின் மூத்த ஸ்வயம்சேவகரும், தமிழகத்தில் 1940களில் பிரசாரகராக இருந்தவருமான ஸ்ரீ நாகநாத் பல்வந்த் காளே (வயது 102), வெள்ளிக்கிழமை (ஏப்.23) காலை 9 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். தமிழகத்தில் சங்கப் பணிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான இவர், ‘மாமா காளே’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். நாகபுரி நகரிய வங்கியை நிறுவுவதில் மாமா காளே முக்கியப் பங்காற்றியுள்ளார்.