இந்த நடவடிக்கை தொடருமா?

தமிழகத்தில் பல இடங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து அதில் வரும் வருமானத்தில் சிலர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களைக் கண்டறிந்து கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அவற்றில் பெரும்பாலான குழந்தைகள் வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டவர்கள். கடந்த ஆண்டில் மட்டும் 135 குழந்தைகளும், கடந்த 4 ஆண்டுகளில் 1263 குழந்தைகளும் மீட்கப்பட்டு ஒப்படைத்துள்ளதாக குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.