இந்தோனேஷிய பாட்மிண்டன் – வெள்ளியோடு விடைபெற்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

ந்தோனேஷிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்  இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து  ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்து, வெள்ளிப் பதக்கத்தோடு விடைபெற்றார்.

ஜகார்த்தாவில்  இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டிநடந்துவந்தது. மகளிர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்திய வீராங்கனையும் தரவரிசையில் 5-ம் இடத்தில் உள்ள பி.வி.சிந்துவை 4-ஆம் நிலை வீராங்கனையையும், ஜப்பானைச் சேர்ந்தவருமானஅகேன் எமகுச்சி எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை எமகுச்சியிடம் 15-21, 16-21 என்ற நேர் செட்களில் போராடி வீழ்ந்து வெள்ளி வென்றார் பி.வி.சிந்து.