இந்தோனேசியா குத்துச்சண்டை – மேரி கோமுக்கு தங்கப் பதக்கம்

இந்தோனேசியாவில் நடந்த 23-வது பிரெசிடென்ட்ஸ் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தோனேசியாவின் லாபுவான் பாஜோ நகரில் 23-வது பிரெசிடென்ட்ஸ் கோப்பை குத்துச்சண்டைப் போட்டி நடந்து வந்தது. இதில் மகளிருக்கான 51-வது எடைப் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை பிராங் ஏப்ரலை எதிர்த்து மோதினார் இந்திய வீரங்கனை மேரி கோம்.

6 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை மேரி கோம் முன், ஆஸ்திரேலிய வீராங்கனை பிராங்க் ஏப்ரலின் முயற்சி பலிக்கவில்லை.

ஒவ்வொரு சுற்றிரும் மேரி கோமின் சூப்பர் பஞ்ச்களுக்கும்,குத்துகளுக்கும் தாங்க முடியாமல் ஆஸ்திரேலிய வீராங்கனை சுருண்டார். முடிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை பிராங் ஏப்ரலை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் மேரி கோம் எளிதாக வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.