இந்திராவை பாராட்டிய மோடி

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணி புரியும் அர்ஜுனின் மகள் இந்திரா. இந்த சிறுமி கொரோனா கால விடுமுறையை வீணாக்காமல் ஆஃகுமெண்ட் ரியாலிடியை பயன்படுத்தி வீட்டின் அறையிலேயே யானை, புலி, பாம்பு உள்ளிட்ட உயிரினங்களை நேரில் காண்பது போல வீடியோ தயாரித்துள்ளார். அந்த வீடியோவில் விலங்குகளை குறித்து அந்த மாணவி ஆங்கிலத்தில் விளக்குகிறார். இதனை பாரத பிரதமர் மோடி பார்த்து ரசித்துள்ளார். அந்த சிறுமியின் அறிவுத்திறனை தன் டிவிட்டர் பதிவில் பாராட்டியுள்ளார்.