ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் – அமைச்சர் அறிவிப்பு

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அட்சிட்டு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிட்டு வழங்க தமிழக பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடகப் பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தமிழக முதல்வருக்கும், பால் வளத்துறை அமைச்சருக்கும் சுட்டுரை பதிவிட்டு கோரிக்கை  வைத்திருந்தார்.

 அதில் தமிழ் மொழியையும் திருக்குறளையும் உலக அரங்கில் அனைத்துக் தரப்பு மக்களிடமும் எடுத்துச் சென்று தமிழுக்கு பெருமை சேர்த்து வருகிறார் பிரதமர் மோடி. தமிழக பா.ஜ.க.வும் திருக்குறளை  மக்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்க்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிட்டு வழங்குவதன் மூலம், ஒவ்வொரு இல்லத்துக்கும் திருக்குறளை எளிமையாகக் கொண்டு சேர்க்க முடியும் என்றார்.

இதற்கு பதிலளித்து சுட்டுரையில் பதிவிட்ட பாலாஜி. முதல்வரின் ஒப்புதலைப் பெற்று ஆவின் பால் பாக்கெட்டுகளில்  மிக விரைவில் திருக்குறள் அச்சிட்டு விநியோகிக்கப்படும் என்று அறிவித்தார்.