ஆயிரத்தில் ஒருவர் ஆகவேண்டாமா நீங்கள்?

அன்புடையீர், வணக்கம்.

கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சும் முஸ்லிம்களுக்கு மசூதியும் வெறும் வழிபாட்டு ஸ்தலங்கள் மட்டும் இல்லை. அது அவர்களின் சமுதாய கூடங்களாக செயல்படுகின்றன. அங்கு அவர்களது சமயத்தின் பிரச்சினைகள் பற்றி பேசி முடிவெடுக்கிறார்கள். தேர்தல் நேரங்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது கூட மசூதிகளிலும் சர்ச்சுகளிலும் முடிவெடுக்கப்படுகிறது. ஆனால் ஹிந்துக்களுக்கு கோயில்கள் என்பது வழிபாட்டு ஸ்தலங்கள் மட்டுமே. பெரும்பாலான நமது பெரிய கோயில்கள் அனைத்தும் அரசின் பிடியில் இருக்கின்றன. எனவே கோயில்களில் ஹிந்துக்களின் நலன் பற்றி பேசுவதற்கோ விவாதிப்பதற்கோ இடம் கிடையாது.

கிறிஸ்தவ அமைப்புகளும் முஸ்லிம் அமைப்புகளும் எண்ணற்ற தொலைக்காட்சிகளில் தங்கள் மதத்தைப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் ஹிந்துக்களின் நலனுக்காக ஓங்கி ஒலிக்கின்ற ஒரே குரல் ‘விஜயபாரதம்’ மட்டுமே.

விஜயபாரதம் என்பது ஒரு பத்திரிகை மட்டுமல்ல. இது ஓர் இயக்கம். விஜயபாரதத்தை ஆதரிப்பது என்பது ஒவ்வொரு ஹிந்துவின் கடமையாகும். உங்கள் உறவினர்கள், நண்பர்கள் என 5 நபர்களையாவது விஜயபாரதத்திற்கு சந்தாதாரர்களாகச் சேர்த்துத் தரும்படி பணிவோடு வேண்டுகிறோம். அப்படி ஒரு ஆயிரம் பேர் முன்வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம். அந்த ஆயிரத்தில் நீங்கள் ஒருவராக முன்வர வேண்டும் என கோருகிறோம். நீங்கள் தயார் எனில் ஒரு போன் செய்தால் அதற்கான ரசீது புத்தகம் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். போன்: 94433 82832