ஆடிக்கிருத்திகைக்கு பிரதமர் வாழ்த்து

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று வாழ்த்து தெரிவித்தார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்” என்று கூறியுள்ளார்.