பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவோம்

முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டர் டோஸ்) கொரோனா தடுப்பூசியை தகுதிவாய்ந்த அனைவரும் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார். சமூக வலைதளத்தில் இக்கருத்தை பதிவு செய்துள்ள அவர், விடுதலைப் பெருவிழாவை ஒட்டி, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேலும் விரைவுபடுத்துமாறும், மாநில அரசுகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தடுப்பூசி இயக்கத்திற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருவதன் மூலம், பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டதாகவும் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.