அளவோடு உண்டு நலமோடு மீண்டு வருவோம்..!

காய்கறிகள் தாராளமாக கிடைத்து அவற்றிலுள்ள தாது உப்புக்களனைத்தும் இரத்தத்தில் ஒருசேரச் சாப்பிட்டாலே நல்லதொரு ஆரோக்யமான விஷயம்தான். ஹர்த்தால்…லாரி ஸ்ட்ரைக் அப்படீனு திடீர்னு ஒருவாரம்..பத்து நாள் காய் கிடைக்காமல் போனால் என்ன செய்ய?

ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள் ஒருவாரம்….பத்து நாட்கள்..காய்கறி சாப்பிடவில்லையானால் நமது உடம்புக்கு ஒன்னும் ஆகிவிடாது. மாறாக உடல் புத்துணர்ச்சி பெறும். எப்படி??

பருப்பு வகைககளையே பத்து விதமாகச் சமைக்கலாம்.

கடைகளில் தாராளமா கிடைக்கும் கொள்ளு. இதில் தயாராகும் ரசம் சிறந்த ஆன்டி பயோடிக் தெரியுமா??!! அதுக்கு காய்கறிகள் தேவையே இல்லை.இதனோடு
உப்பு ,பருப்பு ,சீரகம் போட்டு ரசம்வைக்கலாம். எதிர்ப்பு சக்தி கூடும்…

தட்டைப்பயறு குழம்பு, மொச்சை குழம்பு எல்லாமே சிறந்த வைட்டமின் மற்றும் புரத உணவுகள்…

இட்லி, தோசைக்கு + தேங்காய் சட்னி சைட் டிஷ் சுகமாக இருக்கும்.
பருப்புல பூண்டு சேர்த்து சமைக்கலாம்
வகை வகையா ரசம் வைக்கலாம்
நிலக்கடலை சட்னி, எள்ளு சட்னி, உளுந்து சட்னி, பாசிப்பயறு சட்னினு காய்கறி இல்லாத சைட் டிஷ்கள் ஏராளம்.
சந்தகை, கொழுக்கட்டை, பனியாரம், சப்பாத்தி, பூரி, ராகி களி, கோதுமை களி, சோள மாவு தோசை, பாசி பயறு தோசை, கம்மஞ்சோறு, ராகி கூழ், சோள அம்புலி, கம்மங்கூழ் இப்படி காய்கறி இல்லாத
பெரிய பட்டியலே போடலாம்

காய்கறிகளில் பூசணிக்காய், சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவை ஒன்று முதல் இரண்டு மாசம் தாங்கும். வீட்டில் க்ராசரி போல் வாங்கீ அடுக்கலாமே!!வாங்கிப்போட்டுவிட்டால்வெங்காயம் ஒருவாரம் தாராளமாகத் தாங்கும்.

இவைகளை வாங்க எதுக்குமே மெனக்கெட்டு தினசரி கடைக்கு போக வேண்டாமே… ஒருமுறை வாங்கி வைத்தால் போதுமே..

சொகுசு வாழ்க்கையை விடுத்து இதுபோன்ற லீன் காலங்களில்
குழந்தைகளுக்கு வறுமையைப் பற்றியும், எந்தச்சூழலுக்கும் ஆமைபோல அட்ஜஸ்ட்செய்து பழகீக் கொள்ள சிறாரைப் பழக்குவோம். நெருக்கடி நேரத்தில் வாழ்க்கையைச் சமாளிக்க …கற்றுத்தர இதுமாதிரி வாய்ப்பு கிடைக்காது.

அதேபோல
காய்கறிகள் அருதியாகக் கிடைக்கும்போதும் மினிமல் சாப்பாடு :

காலையில் வீட்டில் பானை/வெங்கலப்பானை சாதம் வடியுங்கள்.. (குக்கரில் அல்ல பழைய முறைப்படி) கிடைக்கும் சுடு கஞ்சியை காலை உணவாக இஞ்சித் துவையலுடன் குடியுங்கள்..

மதியம் சிம்பிளாக இரசம் ஒரு காய் (கூட்டோ பொரியலோ) . கூடுதலாகத் தேவையயானால் இஞ்சித் துவையலும் வைத்துக் கொள்ளவும்

இரவு இட்லி, உப்புமா அல்லது சப்பாத்தி இதில் ஏதாவது ஒன்று. இட்லி எனில் 5
தோசை & சப்பாத்தி எனில் மூன்று போதும்.

இது ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே சமைக்கும் சமையல்.!

வீட்டில் வெல்லம் இருந்தால் அதை நீருடன் கலந்து பானகம், அல்லது எலுமிச்சை ஜுஸ், கரைத்து வைத்துக் கொள்ளவும்..
முடிந்தவரை டீ குடிக்கும் அதே சூட்டில் வெந்நீர் அருந்தவும்..
உருளை பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி ..போண்டா, வடை போன்ற ஸ்நாக்ஸ்களை தவிர்க்கவும்..

சுடுகஞ்சி போரடித்தால் சில நாட்களுக்கு மாற்றாக பிரட் & ஜாம் சாப்பிடவும்..

அசைவம் தவிர்க்க முடியாதவர்கள் மீன் குழம்பு மட்டும் வைத்து சாப்பிடவும் ..அதுவும் பத்து நாட்களுக்கு ஒரு முறையே.

முட்டை உபயோகித்தால் காலையில் பிரேக் பாஸ்ட்டின்போது மட்டும் சாப்பிடவும்..

அதிக பட்சமாக வாரத்தில் இரு நாட்கள் முட்டை உபயோகித்தால் போதுமே…
குருணை அரிசி கஞ்சி, வரகரிசிப் பொங்கல், சாப்பிட்டுப் பழகுங்கள்.

அடுப்பில்லாத சமையல் எனில் வெள்ளைப் பூசணியை தோல்சீவி அதைத் துருவி..
நீரில் 15 நிமிடம் ஊறவைத்து பிறகு அதை நன்கு பிழிந்தெடுத்து தயிர் ஊற்றி பிசைந்து சாப்பிடவும்.. இது தயிர் சாதத்தை விட சுவையாக இருக்கும்..

ஊறுகாய் எனில் எலுமிச்சை, நார்த்தங்காய், கோங்குரா மட்டும் தொட்டுக் கொள்ளவும்.!

கோதுமை ரவா உப்புமா சாப்பிடுவது மிகவும் உத்தமம்.!
குழந்தைகளுக்கு பிடிக்க வேண்டும் என்றால் அந்த உப்புமாவில் காரட், பட்டாணி, சிறிதாக நறுக்கிய உருளைக்கிழங்கு,
கொஞ்சம் இஞ்சி( ஒரு ஸ்பூன் மிளகு பொடிசெய்து)போட்டு கிச்சடி போலச் சாப்பிடக் கொடுக்கலாம்.

தேங்காய்ச் சட்னி குழந்தைகளுக்கு மட்டுமே.! பெரியவர்கள் புதினா & கொத்தமல்லி அல்லது இஞ்சி சட்னி சேர்க்கலாம்.
வேப்பிலைப் பொடியும் நல்லெண்ணெயும் இன்னும் சிறப்பு… நெல்லைபகுதிகளில் இது பிரபலம்.
அப்பளத்தை பொரிக்காது சுட்டு பயன்படுத்தவும்..

பிரண்டை, சுண்டைக்காய் வத்தக் குழம்புகள் இன்னும் சிறப்பு.. முடிந்தால் அதில் இரண்டு கடுக்காயைப்..
பொடி செய்து சேர்க்கவும்.. வேப்பிலைக் கொழுந்தும் சிறிது அரைத்து வத்தக்குழம்பில் சேர்க்கலாம்.. சுண்டை நெஞ்சுச் சளிக்கு சஞ்சீவி.

வாரம் ஒரு முறை கருணைக் கிழங்கு, சிறுகிழங்கு புளிக்குழம்பு வைக்கவும்..

பூசணி, பீர்க்கங்காய், புடலை, பாகற்காய் போட்டு கூட்டு வைப்பதும் சாலச் சிறந்தது.!

மிளகு இரசமும் எலுமிச்சை இரசமும் வாரம் முழுவதும் வைக்கலாம்.!
பாகற்காயை வட்டமாகச் சீவி மஞ்சள்தூள் தடவி வதங்கல் செய்யலாம்.!

தக்காளி, கத்திரிக்காயின் உபயோகம் குறைவாகவே இருக்கட்டும் (ஈஸ்னோபீலியா)

முருங்கை, அவரை, நூக்கல், பீட்ரூட், காரட், பொடி பாகற்காய், முள்ளங்கி ஆவாரம் பூ, மணத்தக்காளி, சிறுகீரை, வெந்தயக்கீரை கிடைத்தால் யோசிக்காமல் வாங்கிவிடவும்.!

சிக்கன் & மட்டன். தவிர்க்க கொஞ்சாம் கொஞ்சமாய் முயற்சிக்கலாமே….!!! பாவம் அந்த உயிர்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் வாழட்டுமே.!
மேற்சொன்ன அனைத்து காய்கறிகளும்..
உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் உணவுகள்.!
இதை வீட்டில் முடிந்த அளவு சமைத்து முயன்று பாருங்கள்.!