அருணாசல பிரதேச தேர்தலில் பாஜக அமோக வெற்றி

அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பாஜ கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இடா நகர் நகராட்சியில் மொத்தமுள்ள 20 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்களை பாஜக வென்றுள்ளது. அதில் 5 நபர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் 9 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளமும் ஒரு இடத்தை தேசிய மக்கள் கட்சியும் கைப்பற்றியுள்ளது. பஸ்திகாட் நகராட்சியில் மொத்தமுள்ள எட்டு தொகுதிகளில் ஐந்து இடங்களையும் மூன்று இடங்களை ஜனதாதளமும் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை மொத்தமுள்ள 128 ஜில்லா பரிசத் உறுப்பினர்களில் 121 ஐ கைபற்றியுள்ளது 7240 உறுப்பினர்களை கொண்ட கிராம பஞ்சயத்து உறுப்பினர்களில் 5410 நபர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்பே 94 ஜில்லா பரிஷத் உறுப்பினர்களும் 5140 கிராம பஞ்சாய்த்து உறுப்பினர்களும் 5 நகராட்சி உறுப்பினர்களும் பாஜக வின் சார்பில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.