அயோத்தி வழக்கில் நீதிமன்றத்தை மதிப்போம்-பிரதமர் மோடி

நாசிக்கில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது அயோத்தி ராமர் பிரச்சனை நீதிமன்றம் விசாரித்து வருகிறது எனவே நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து அதனை மதித்து நடக்க வேண்டும். இந்த விஷயத்தில் தேவையில்லாத விமர்சனங்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் பிரச்சினையை சிலர் தேவை இல்லாமல் தொடர்ந்து பேசி வருவது எனக்கு வியப்பளிக்கிறது அயோத்தி வழக்கில் நீதிமன்றம் இப்போது விசாரித்து வருகிறது எனவே இந்த விஷயத்தில் நீதிமன்றத்தை மதித்து நடக்க வேண்டும் அயோத்தி விவகாரம் குறித்து தொடர்ந்து பேசி வருபவர்களை நமது நீதித்துறை மீது நம்பிக்கை வைக்கவேண்டும் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றார் பிரதமர் மோடி