அமெரிக்கா ஆதரவு

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை பெறுவது நமது பாரதத்தின் நீண்ட கால கனவு. இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், அணுசக்தி வினியோக குழுவில் பாரதம் இடம் பெறுவதற்கும் அமெரிக்கா தனது தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. வாஷிங்டனில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்க பிரதிநிதிகளான ஆண்டனி பிளிங்கனையும், லாயிட் ஆஸ்டினையும் சந்தித்து பேசிய பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.