அமித்ஷாவுக்கு நன்றி

என் மகள் உண்மைக்காக போராடுகிறாள். இதனால் அவளின் உயிருக்கு ஆபத்து வந்துள்ளது. எங்கள் குடும்பம் பரம்பரையாகவே காங்கிரஸை ஆதரித்து வந்துள்ளது. பிஜேபியுடன் தொடர்பு இருந்ததே இல்லை. எங்களுக்கு இந்த தருணத்தில் காங்கிரஸ் எவ்வித உதவியும் செய்யவில்லை. ஆனால் உள்துறை அமைச்சர் அமீத்ஷாதான் என் மகளுக்கு தகுந்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார். அவரின் உதவியை நாங்கள் மறக்க மாட்டோம். அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். இதை கூறியவர் வேறு யாரும் அல்ல, மகாராஷ்டிர அரசை ஒற்றை பெண்ணாக தைரியமாக எதிர்க்கும் பிரபல நடிகை கங்கணா ரனாவத்தின் தாயார் ஆஷா ரனாவத்தான்.
மணிகர்ணிகா படத்தில் ஜான்ஸிராணியாக நடித்தவர் கங்கணா. தற்போது சிவசேனா கண்களுக்கு இவர் நிஜ ஜான்ஸி ராணியாகவே காட்சிக்களிக்கிறார்.