அத்திவரதர் திருவிழாவில் அரும்பணியாற்றிய தொண்டர்களுக்கு விருதுகள்

“காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் ஸ்ரீ ஆதி அத்தி வரதர் வைபவம்  48 நாட்கள்  சிறப்பாக நடைபெற்றது.  அனைத்துலக நாடுகளிலுமிருந்து சூமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஸ்ரீ அத்தி வரதரை தரிசித்து பேரானந்தம் அடைந்தனர். அத்தி வரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் அனைவருக்கும் ஹிந்து அமைப்புகள் மூலம் பல்வேறு விதமான தொண்டு காரியங்கள் செய்திருந்தனர்.  இந்த சீரிய தொண்டு செய்ய உதவிய  அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் சேவாபாரதி அமைப்பின் சார்பாக மனமார்ந்த மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டார்கள். தங்களுடைய சுய வேலைகளை மறந்து துறந்து அத்திவரதர் பணி ஒன்றே சிறந்தது என்று சேவை புரிந்த அத்துணை நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்கள் . மகிழ்ச்சியான இத்தருணத்தில் இந்து சமுதாய பணியானது மென்மேலும் தொடர  அனைவரும் இணைந்து பாரதமாதாவின் தேரை வடம் பிடித்து இழுத்து பாரதமாதாவை உலக அரியணையில் ஏற்ற உறுதி பூணவும்  இந்த பணியில் மேலும் பல்வேறு விதமான உதவிகள் புரிந்த அனைவருக்கும் மனமார்ந்த மகிழ்ச்சியையும்  தெரிவித்துக் கொண்டது ஆர்எஸ்எஸ் காஞ்சிபுரம்.