ஹிந்துக்கள் தி.மு.க.வுக்கு ஓட்டுப்போடக்கூடாது

“இந்து என்றால் திருடன்!”

“ராமன் ஒரு குடிகாரன்!”

சொன்னவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. கழகத்தினரும் சரி, அவர்கள் உடனிருக்கும் காவாலிகளும் சரி ஹிந்து மதத்தை இழிவு படுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பேசிய சிலவற்றைப் பார்ப்போம்.

* கோகுலத்துக் கண்ணனை விரசக் கண் கொண்டு பார்த்த இதே வீரமணி தான் பூணூல் அறுக்கவும், ஹிந்துப் பெண்களின் தாலி அறுக்கவும் போராட்டம் நடத்தினார்.

* ஐயப்ப அவதாரத்தை ஆபாசமாகப் பேசிய திருமாவளவன் தான் சனாதன தர்ம ஒழிப்பு மாநாடு நடத்தி, சிவன், பெருமாள் கோவில்களை இடிக்க வேண்டும் என்று பேசினார்.

* ஆண்டாள் குறித்து அவதூறு பேசியவர் வைரமுத்து.

* ஹிந்து மதத்தை எப்போதுமே இழிவாகப் பேசுபவர் கிறிஸ்தவன் பிரசன்னா.

* திருப்பதி சாமிக்கு சக்தி இல்லை எனச் சொன்னவர் கனிமொழி.

* முஸ்லிம் நிக்காவில் நின்று கொண்டு ஹிந்து திருமணச் சடங்குகளைக் கேலி, கிண்டல் செய்தவர் ஸ்டாலின்.

இப்படி வேண்டும் என்றே ஹிந்து மதத்தை இழிவு படுத்தி விட்டு, தேர்தல் என்று வந்த உடன் ஹிந்துக்களின் வீட்டு வாசப் படியில் வந்து படுத்துக் கொள்கிறார் ஸ்டாலின். திமுக ஹிந்துக்களின் எதிரி அல்ல எனக் கொக்கரிக்கிறார்.  இந்த ஒட்டு மொத்தக் களவாணிக் கூட்டத்தையும், நெற்றியில் என்ன ரத்தம் வழிகிறது எனக் கருணாநிதி கேட்டதையும், நெற்றியில் வைத்த திருநீற்றை உடனே அழித்த ஸ்டாலினையும் ஹிந்துக்கள் மன்னிக்கப் போகிறார்களா என்ன?

அடையவில்லை திராவிட நாடு! அடையப் போவது சுடுகாடு! தி.மு. கழகத்தை சுடுகாட்டுக்கு இட்டும் செல்லும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் அதன் தற்போதைய தலைவர் ஸ்டாலின். அவர் கூட்டணியில் வைத்திருக்கும் பிரிவினைவாதக் கூட்டங்களே திமுகவின் செயல்பாடுகளை வகுக்கின்றன. இதைத் தான் “வால் நாயை ஆட்டுகிறது” என்று தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி ஒருவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். அது எந்த அளவு உண்மை என்பது வாக்காளர்களுக்கு இப்போது புரிந்து இருக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சொன்னபடி, ஊழலில் சாதனை புரிந்த கட்சி என்று அரசு அமைத்த சர்காரியா குழுவாலேயே பட்டம் பெற்ற ஒரே கட்சி திமுக. அவர்கள் ஆட்சி அமைக்க மீண்டும் ஆசைப்படுவது அந்தச் சாதனை அளவையும் தாண்டி ஊழல் புரிந்திடத் தான்.

மறக்க மாட்டார்கள் தமிழர்கள்!

மறப்பதும், மன்னிப்பதும் தமிழர்களின் வழக்கம். ஆனால் இந்த முறையும், இனி மேலும் தமிழர்கள் இந்த திருட்டுக் கும்பலை மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என்பது உறுதி!