மத்திய அரசின் அதிரடி; ஆப்ஸ் தொடர்ந்து மின் சாதனப் பொருட்களுக்கும் தடை விதிக்க மும்முரம்

59 செயலிகளை தடை செய்திருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக, ‘டிவி, ஏர் கண்டிஷனர்’ உள்ளிட்ட, 12 பொருட்களின் இறக்குமதியை குறைப்பது குறித்த நடவடிக்கையில், அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

குறிப்பாக, ஏர் கண்டிஷனர் மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவதன் மூலம், உள்நாட்டில், 1 டஜன் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. சுங்க வரி அதிகரிப்பு மற்றும் தொழில்நுட்ப தர கட்டுப்பாடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல வழிகளில், இறக்குமதியை ஒழுங்குபடுத்த திட்டமிடப்படுகிறது.