கொரானா தடுப்பு நடவடிக்கை வரிசையில் தற்போது ஆர்.எஸ்.எஸ்

ஆர் எஸ் எஸ் சேர்ந்த ஸ்வயம் சேவகர்கள்,சேவாபாரதி தமிழ்நாடு, சமர்ப்பணம் சேவைமையம் அறக்கட்டளைகள் மூலமாக நந்தனார் தெருவிலுள்ள குடிசைப்பகுதி மக்களை கொரானா வைரஸிலிருந்து பாதுகாக்க மாஸ்க் மற்றும் சானிடைசர் (கைசுத்திகரிப்பான்), விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான பிரசுரங்கள் ஆகியவைகள் வீடு வீடாகச் சென்று (கூட்டமாக இல்லாமல் ) தனித்தனியாக கொடுத்து புரிய வைத்தனர். ஆர் எஸ் எஸ் மாநில இணைச்செயலாளர்(மக்கள் தொடர்பு ) இராம இராஜசேகர் அவர்கள் பொருட்களை கொடுத்து துவக்கி வைத்தார். மாவட்ட பொறுப்பாளர் முருகவேல், நகரசெயலாளர் முரளீதரன் ஆகியோர் உடனிருந்தனர்