கொரனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் என தகவல்

சீனாவில் கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், உலகம் முழும் 180 நாடுகளுக்கு மேல் வைரஸ் தொற்று பரவி நாளுக்கு நாள் அச்சுறுத்தலை அதிகப்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 21,200 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் 4,22,566-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 1027 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீவிரம் அடைந்து வரும் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வரமால் இருப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.