எஸ்ஐ தேர்வுக்கு முடிவு வெளியானது.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவு இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை, 1 லட்சத்து 42 ஆயிரத்து 243 பேர் மற்றும் காவல் துறையில் பணியாற்றும் 17 ஆயிரத்து 447 பேர் மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் கடந்த 12ம் தேதி எழுதினர். இந்த எழுத்து  தேர்வுக்கான முடிவுகள் நேற்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தின் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.