குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் பாஜக பேரணி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி திமுக ,காங்கிரஸ் போன்ற பல்வேறு கட்சிகள் தவறாக சித்தரித்து பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.அதனை முறியடிக்கும் வகையில் சென்னையில் பழைய சித்ரா தியேட்டர் அருகில் (புதுப்பேட்டை) ஜனவரி 7  மாலை 3 மணிக்கு மாபெரும் பேரணி நடத்தப்போவதாக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.இந்த பேரணியில் பாஜகவின் மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.