காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக்க போராடிய பாரதிய ஜனசங்க தலைவர் ஸ்யாம பிரசாத் முகர்ஜியின் கனவு இன்று நினைவானது

காஷ்மீர் மாநிலத்துக்கு தரப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய பா.ஜ., அரசு ரத்து செய்தது. நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ள இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை பற்றி ஜனசங்க நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜி ஆய்வுமைய இயக்குனர் அனிர்பன் கங்குலி எழுதி உள்ளதாவது: ஒரு முறை அப்போதைய காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சிதலைவர் ஷேக் அப்துல்லாவிடம், ‛‛இந்திய தேசிய கொடிக்கு மரியாதை கொடுப்பீர்களா” என சிலர் கேட்டனர். அதற்கு அவர், ‛‛அப்படியா, அந்தக் கொடியை நாங்கள் அங்கீகரிப்போம்” என்று வேறு ஏதோ கொடியைப் பற்றி சொல்வது போல் பதில் அளித்தார்.

ஏற்கனவே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கு எதிராக போராடிக்கொண்டு இருந்த ஜனசங்க நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜி காதுகளுக்கு அப்துல்லா கூறியது எட்டியது. பார்லிமென்டில் முழங்கிய அவர், ‛‛யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொடி இருக்கும். அது தான் சுதந்திர இந்தியாவின் தேசிய கொடி” என்றார்.

இதற்கு பதில் அளித்த ஷேக் அப்துல்லா, ‛‛இரு கொடிகளையும் (காஷ்மீருக்கு என்று தனி கொடி இருந்தது) நாங்கள் சமமாக மதிப்போம்” என்றார். சும்மா இருப்பாரா முகர்ஜி. அவரும் பதிலுக்கு, ‛‛நீங்கள் இரு கொடிகளையும் சமமாக நடத்த முடியாது. தேசிய கொடி என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கானது. அந்த நாட்டுக்கு உட்பட்டது தான் காஷ்மீரும்” என்று கர்ஜித்தார். 370ஐ நீக்காவிட்டால் வெளிநாட்டு சக்திகள் தலையிட்டு நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் குந்தகம் ஏற்படுத்தும் என நம்பினார் முகர்ஜி. ஆனால் நேருவுக்கும் அப்துல்லாவுக்கும் இருந்த நெருக்கத்தால் அவரது கனவு தள்ளிப்போனது. சூழ்ச்சியால் சிறையில் அடைக்கப்பட்டு ஸ்ரீநகர் சிறையில் மர்மமான முறையில் இறந்தார். இறக்கும் வரை ஒரே தேசம் என்ற கோஷத்தை முன் வைத்தபடி இருந்தார்.

காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதன் மூலம், அவரது கனவு இப்போது நிறைவேறி உள்ளது. ஜனசங்கம் மற்றும் பா.ஜ.,வின் பல ஆண்டு போராட்டமும் அது தான். எதிர்காலத்தில் இந்த சட்டப்பிரிவை நீக்க முடியுமா என்று அப்போது சந்தேகம் எழுந்தபோது, சர்தார் வல்லபாய் படேல் ‛‛இந்திய அரசின் துணிச்சல், பலத்தைப் பொறுத்து தான் அது முடிவாகும். நமது பலத்தின் மீது நமக்கே நம்பிக்கை இல்லை என்றால் தனி நாடாக இருக்கவே நமக்கு தகுதி இருக்காது” என்றுகூறினார்.

அந்த துணிவும் தன்னம்பிக்கையும் இப்போதைய மத்திய அரசுக்கு உள்ளது என்பது தெரிந்து விட்டது. ‛‛வெற்று மிரட்டலுக்கு இடம் கொடுக்கக் கூடாது. நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் பேரம் பேசுவதற்கும் அப்பாற்பட்டது” என்பதில் மோடியும் அமித்ஷாவும் தெளிவாக இருந்தனர். கிட்டத்தட்ட 70 ஆண்டு நீண்ட போராட்டத்திற்குப் பின் கிடைத்த வெற்றி இது. தனது முதல் தேர்தல் அறிக்கையில் ‛‛காஷ்மீரின் நிச்சயமற்ற எதிர்காலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க மற்ற மாநிலங்களைப் போல, சிறப்பு அந்தஸ்து இல்லாமல் அதுவும் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவும் அவரது சகாக்களும் காஷ்மீர் சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து போராடினர். தீனதயாளே இதை வலியுறுத்தி நிறைய எழுதினார். ஜன சங்கத்தின் எட்டாவது தலைவர் ரகுவீர் இது பற்றி எழுதும்போது, ‛காஷ்மீரின் ஆன்மாவும் உடலும் நாட்டுக்கு சொந்தம்’ என்பதை மக்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்றார்.
1991ல், ஸ்ரீநகரில் உள்ள லால்சவுக்கில் தேசிய கொடியை ஏற்றும் நோக்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பா.ஜ., நடத்திய யாத்திரையின்போது, ‛‛ஒரே நாடு” என்ற கோஷம் முன் வைக்கப்பட்டது. இந்த யாத்திரையை, மோடி தான்அப்போது ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தினார்.
இந்த யாத்திரையைக் கண்டித்து சில கட்சிகள் பார்லிமென்டில் குய்யோ முறையோ என கூக்குரலிட்டபோது பேசிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ‛‛கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒரே நாடு என்று கூறுவது தவறா. எக்காரணம் கொண்டு இந்தியா மீண்டும் துண்டாடப்படக் கூடாது என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான் காஷ்மீர் என்று சொல்வதும் தவறா” என்று கேட்டார்.

இந்த சமயத்தில் பாராளுமன்றத்தில் வாஜ்பாய் அவர்களின் 13 நாள் ஆட்சி முடிவுக்கு வந்தபோது அவர் பேசிய வார்த்தைகள் இன்றய நிகழ்வுக்கு சரியாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

எங்களுக்கு போதிய பெரும்பான்மை பலம் இல்லாமல் நாங்கள் கவிழும் நிலையில்  இன்று இருக்கலாம் அதை  எல்லாம் பார்த்து நீங்கள் சிரிக்கலாம் ஆனந்தமடையலாம் ஆனால் ஒருநாள் நாங்களும் மக்களின் விருப்பத்தை பெருவோம் அப்போது தேசம் முழுவதும் பாரதீய ஜனதாவின் ஆட்சி நடக்கும் அப்போது மக்கள் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள் இது ஒருநாள் நடக்கும் அப்போது நீங்கள் மக்கள் சக்தியை உணருவீர்கள் என்றார். இன்று அவரின் சிஷ்யனான நரேந்திர மோடியின் தலைமையில் அவரது நண்பர் அமித்ஷா உதவியுடன் எல்லா காரியங்களையும் மிக சிறப்பாக  நடத்தி வருகிறார். நல்ல தலைவர்களின் ஆன்மாக்களின் வாக்கு பலிக்கும் அது இன்று பலித்து வருகிறது.

எது எப்படியோ இந்த தேசம் ஒரே தேசமாக வலிமையுள்ள தேசமாக எல்லோரும்  இன்று புரிந்து கொள்ள செய்ததுள்ளது. ஆண்மையுள்ள ஒரு பிரதமரால் மட்டிலுமே இது சாத்தியமாகியுள்ளது. நாட்டில் எத்தனையோ தலைவர்கள் ஆட்சிக்கு வந்து தங்களையும் தங்களது வாரிசுகளையும் வளர்த்து சுயநலத்தில் தோய்ந்து மறைந்து போயினர். ஆனால் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் தனது குடும்பம் தன் வீடு தனது சுற்றம் எல்லாவற்றையும் மறந்து தேசபக்தி ஒன்றையே தனது குறிக்கோளாகவும் நாட்டின் வளச்சியை நோக்கமாகவும் தனது தலைவர்களின் தன்னலமற்ற பாதையில் நாட்டை கொண்டுசெல்லும் தேசப்பக்த பிரதமருக்கு ஒரு சல்யூட்.  தொடரட்டும் அதிரடி… வெடிக்கட்டும் சரவெடியாய் மக்கள் நலத் திட்டங்கள் வாழ்க பாரதம்  வளர்க நாடு.