உத்தரவை மீறி வெளியே வந்த 1252 பேர் மீது வழக்கு

கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை, சுகாதாரத் துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை முதல் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை காவல்துறை தீவிரமாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது.

ஊரடங்கு உத்தரவை மீறி பொதுஇடங்களில் கூட்டமாக அரட்டை அடித்துக் கொண்டிருப்பவா்கள், சாலைகளில் மோட்டாா் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுகிறவா்கள், விளையாடுகிறவா்கள், தேவையில்லாமல் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே வருகிறவா்கள் என தமிழகம் முழுவதும் 1252 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.