‘ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ராணுவம் தயார்’ – ராணுவ தளபதி பிபின் ராவத்

”பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயாராக உள்ளது” என நம் ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார்.

பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரும் பா.ஜ. வைச் சேர்ந்தவருமான ஜிதேந்திர சிங் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் ‘பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது தான் இந்தியாவின் அடுத்த இலக்கு’ என கூறியிருந்தார்.

பின், ராணுவ தளபதி பிபின் ராவத், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அரசு உத்தரவிட்டால் அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து அமைப்புகளும் அதை நிறைவேற்ற தயாராக உள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அந்நாட்டின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என மத்திய அரசு விரும்பினால் அதை நிறைவேற்ற இந்திய ராணுவ வீரர்கள் எப்போதும் தயாராகவே உள்ளனர் என்று கூறினார்.