ஹிந்து மதம் குறித்து தி.மு.க., -எம்.பி., சர்ச்சை பேச்சு

ஜாதி, மத ரீதியிலான நச்சுக் கருத்துக்களை பரப்புவோரை கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.  “வட மாநிலத்தில் விநாயகருக்கு பின் சிவன்-பார்வதி குடும்பக் கட்டுப்பாடு செய்தார்களா?” என்று தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் ஹிந்துக்களின் மனம் புண்படும்படி பேசியிருப்பது  வன்மையாக கண்டிக்கத்தது, தண்டிக்கத்தக்கது.  முதலமைச்சரின் உத்தரவை ஏற்று ஹிந்து மதம் குறித்த நச்சு கருத்தை பேசிய செந்தில் குமார் மீது தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்குமா? முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கைது செய்யப்படுவாரா? மதம் குறித்து அவதூறு கருத்தை கூறிய செந்தில் குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிடுவார் என உறுதியாக நம்புகிறேன் என பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.