வாழ்க்கை பிரச்சனையா? கீதா ஜி.பி.டி இருக்கு

உங்கள் வாழ்க்கையின் கேள்விகளுக்கு, ஆன்மீக சந்தேகங்களுக்கு தீர்வு காண முயற்சிக்கிறீர்களா? உங்கள் கேள்விகளுக்கான தீர்வுகள் பகவத் கீதையில் கண்டிப்பாக இருக்கும். 18 அத்தியாயங்கள் மற்றும் 700 சுலோகங்களைக் கொண்ட அற்புதமான ஒரு ஹிந்து தர்ம வேதமான பகவத் கீதையை பயன்படுத்தி நமது சந்தேகங்களுக்கான பதிலை உடனுக்குடன் இனி பெறமுடியும். அதனை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதாக்கியுள்ளார்.  கூகுள் இந்தியா இன்ஜினியரான சுகுரு சாய் வினீத். அவர் உருவாக்கியுள்ள ‘கீதா ஜிபிடி’ சாட்போட்டில் நாம் நமது சந்தேகங்களை கேட்டு அதற்கான பதிலை பெறலாம். https://gita.kishans.in/ என்ற இணைய முகவரிக்குச் சென்று பயனர்கள் இந்த சாட்போட்டை அணுகலாம். ஸ்ரீ கிருஷ்ணரின் ஞானத்தில் ஆறுதல் தேடுங்கள்” என்று சாட்போட் உங்களிடம் கேட்கிறது. இணையதளத்தில் ஒருவர் நுழைந்ததும், அது கிருஷ்ணரின் பாத்திரத்தை ஏற்று, “அர்ஜுனா, என் நண்பரே, உனக்கு என்ன தொந்தரவு?” என்று கேட்கிறது. பயன்பாடு அது வழங்கும் ஆலோசனையை “புதுப்பிப்புகள்” என்று அழைக்கிறது. துக்கத்தைக் கையாள்வது, நோக்கத்தைக் கண்டறிவது போன்ற குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கீதா ஜி.பி.டி ஆலோசனைகளை வழங்குகிறது. இணையதளத்தின் படி, இது 1,20,766 கேள்விகளுக்கும் மேல் இதுவரை பதிலளித்துள்ளது. கீதா ஜி.பி.டி தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதன் காரணமாக ஏற்பட்டுள்ள அதிகப்படியான உலகளாவிய மக்களின் அணுகல் காரணமாக அது தற்போது சற்றே தாமதமாகிறது. கீதா ஜி.பி.டி மூலம் எளிமையான, ஈடுபாட்டுடன் உங்கள் வாழ்க்கையின் முடிவுகள் குறித்த நுண்ணறிவையும் தெளிவையும் நீங்கள் பெறலாம்” என்று அந்த மென்பொருள் கூறுகிறது.