மோடி மீண்டும் பிரதமராக அதிருத்ர மஹா யாகம்

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும் என்பதற்காக, ஷிவமொகா மாவட்ட வீரசைவ ஜங்கம் அர்ச்சகர் சங்கத்தினர் இரண்டு நாள் அதிருத்ர மஹாயாகம் நடத்தினர்.

ஷிவமொகா நகரின் வினோபா நகரில் சிவாலய வளாகத்தில் இரண்டு நாள் மஹாயாகம் உஜ்ஜயினி பீடத்தின் தேசிகேந்திர சிவாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் நேற்று முன்தினம்துவங்கியது. நிறைவு நாளான நேற்று பல்வேறு சிவாச்சாரியார்கள், பா.ஜ., – எம்.பி., ராகவேந்திரா, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உட்பட பலர் பங்கேற்றனர். இவ்விழாவில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக ‘அதிருத்ர மஹா யாகம்’ நடத்தப்பட்டது.

இதுகுறித்து ஈஸ்வரப்பா கூறியதாவது: அதிருத்ர யாகத்தில் எதிர்பார்ப்பை மீறி நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 11 ஹோம குண்டங்களில் ஹோமம் நடந்தது. உஜ்ஜயினி குரு உலக நலனுக்காக, ‘நாடும், மதமும் காப்பாற்றப்பட வேண்டுமானால், தன்னலமற்ற நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்’ என கூறியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

அவரது ஆசியுடன், நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். எம்.பி., ராகவேந்திரா கூறுகையில், ”நம் மாவட்டத்தில் வறட்சி நீங்கி, மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, உஜ்ஜயினி மற்றும் சிவாச்சாரியார்கள் தலைமையில் இரண்டு நாள் ஹோமம், பூர்ணாஹூதியும் சிறப்பாக நடந்தது,” என்றார்.

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக, அதிருத்ர மஹா யாகம் நடத்தப்பட்டது. இடம்: ஷிவமொகா.